Monday, November 21, 2016

குரூஸ் பர்னாந்து சிலை முன்பு பொங்கல் வழங்கிய முன்னாள் கவுன்சிலர்



துாத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் கவுன்சிலர் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார்.


துாத்துக்குடி 46 வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், தியாகி கருப்பசாமி பண்ணையார் மகன் வெங்கட சுப்பிரமணியன். இவர் தனது மனைவி காந்திமதியுடன் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்துாவி பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், துாத்துக்குடி நகருடைய தண்ணீர் தாகத்தை தீர்த்து வைத்தவர் குரூஸ் பர்னாந்து. அவர் ஒரு சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானவர்.

அதற்கு நன்றி கடனாக அவரது பிறந்த நாளின் போது அவரது சிலை முன்பு பொங்கலிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. காவல்துறை அனுமதி இல்லாத காரணத்தினால் இந்தாண்டு பொங்கல் வைக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு கண்டிப்பாக நான் எனது குடும்பத்தாருடன் பொங்கலிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.