Thursday, January 14, 2016

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பொங்கல் விழா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிதித்துறை தலைவர் அனுப் அகர்வால், தாமிர உற்பத்தி பிரிவு தலைவர் அனுஷ்கோயல், மனிதவள மேம்பாட்டு தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன், ஏற்றுமதி பிரிவு தலைவர் ஹரிகரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
பொங்கல் விழாவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமிர ஆலையின் மகளிர் கூட்ட‌மைப்பான ஃபெமினா குழுவினர் செய்திருந்தது.