Wednesday, January 22, 2014

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: திமுக வெளிநடப்பு

 


தூத்துக்குடி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் ஆணையர் மதுமதி, துணை மேயர் சேவியர், பொறியாளர் ராஜகோபாலன், மண்டல தலைவர்கள் வெள்ளப்பாண்டி, கோகிலா, செல்வராஜ், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் சசிகலா புஷ்பா பேசுகையில், தூத்துக்குடி கடலோர பகுதியாகும். இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு மாநகராட்சி கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது என்றார். 

பின்னர் கூட்ட அஜென்டா வாசிக்கப்பட்டபோது, 46வது வார்டு திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் குறுக்கிட்டு, தனது வார்டில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகம் இன்று வரை திறக்கப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து திமுக கொறடா கோட்டுராஜா பேசுகையில், தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நூலகங்களை திறக்காததைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். 

தொடர்ந்து மேயரைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டவாறு வெளியேறினர். அப்போது மேயருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்க்ள கோஷமிட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் தூத்துக்குடி எம்எல்ஏ நிதி 1.41 கோடி மதிப்பீட்டில் 17 பணிகளை மேற்கொள்வது, மாநகராட்சியில் காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு ஆள்களை நியமிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் ஆடுகளுக்கு ஆயிரம், மாட்டுக்கு ரூ.5ஆயிரம், கன்றுகுட்டிக்கு ரூ.2ஆயிரம் அபாராதம் மற்றும் நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக ரூ.200 உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும், 2 முறைக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்ட கால்நடைகள் கோசலை வசம் ஒப்படைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



 

Saturday, January 4, 2014

VV MINIERALS NATIONAL AWARD


tp.tp. kpduYf;F Njrpa tpUJ

 

     tp.tp. kpduy; epWtdk; ,e;jpa muR rpwe;j Vw;Wkjp tpUij fle;j 21 Mz;Lfshf njhlHe;J ngw;WtUtJ njhpe;jNj. me;j epWtdj;jpw;F ,e;j Mz;Lk;> kj;jpa muR top exporter award Vw;Wkjp tpUij toq;fp rpwg;gpj;Js;sJ. ,e;j epWtdk; J}j;Jf;Fb JiwKfj;jpd; topahf mjpf fhHdl;> ,y;kidl; Vw;Wkjp nra;tjjw;F njhlHe;J tpUJfs; ngw;WtUtJ njhpe;jNj.   fle;j 26.12.2013 md;W fy;fj;jhtpy; eilngw;w ,e;j Njrpa tpUJ toq;Fk; tpohtpy; kj;jpa ,iz mikr;rH RjHrd ehr;rpag;gdplk; ,Ue;J tp.tp.kpduy; S.itFz;luh[d; tpUij ngw;W nfhz;lhH.

tp.tp.kpduYf;F jpUney;Ntyp> J}j;Jf;Fb> fd;dpahFkhp khtl;lq;fspy; Ruq;f Fj;jiffSk;> njhopw;rhiyfSk; cs;sJ. kj;jpa> khepy muR Jiwfspy; tp.tp.kpduy; epWtdj;jpw;F Kd;Dhpik toq;fNtz;Lnkd ,e;jpa muR ,e;j epWtdj;jpw;F fphPd; fhHLk; toq;fpAs;sJ. mZrf;jp Jiwapdhpd; rpwg;G gapw;rp ngw;w gzpahsHfis nfhz;l ,e;j epWtdk; %yk; RkhH 40>000 NgUf;F Nky; Neub kiwKf Ntiytha;g;G ngUfpwhHfs;. ,e;j epWtdk; Vio khztHfSf;F fy;tp cgfuzq;fs; toq;fp tUtNjhL jw;nghOJ njhopyhsH kw;Wk; mtHjk; FLk;g cWg;gpdHfSf;F ,ytr kUj;Jt NritfSk;> ,ytr Nritf;Fk; jiyrpwe;j kUj;JtkidfNshL cld;gbf;if nra;J Vw;ghl nra;Js;sJ.

tpUJ toq;Fk; tpohtpy; ,e;jpa muR Vw;Wkjp Jiw ,af;FeH iluf;lH n[duy; kw;Wk; Nfngf;rpy; mjpfhhpfs; mikr;NuhL fye;J nfhz;lhHfs;. Vw;Wkjpia Cf;Ftpf;f Ntz;bajd; mtrpak; gw;wp jpU.RjHrd ehr;rpag;gd; Ngrk; NghJ Vw;Wkjpia mjpfgLj;jpdhy; jhd; ,e;jpa jd;dpiwT milt KbAk;. mjw;F midj;J kl;lj;jpYk; midtUk; xj;Jiof;f Ntz;Lk; vd Fwpg;gpl;lhH.

fs;sfglkw;w nts;is cs;sj;jpw;F nrhe;jf;fhuuhd nts;isNtl;b jkpoH itFz;luh[d; ,e;j rpwg;G Njrpa tpUJ ngw;wij gpu]; Vl;ilah tho;j;J njhptpj;Jf;nfhs;fpwhH.

Friday, January 3, 2014

தூத்துக்குடி வந்த வெளிநாட்டினர்

  >

-

கல்
 


ஆட்டோ ரிக்ஷாவில் தூத்துக்குடி வந்த வெளிநாட்டினர் - சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகம்..!!


தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தினை அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தொடங்கிய  ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலா பயணம் தூத்துக்குடி வந்தது.

சென்னையில் உள்ள ஈவன் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் அமைப்பு கடந்த 9 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை நடத்தி வருகிறது. ஜெர்மன், ஹாலந்து, ஆஸ்திரேலியா, லண்டன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 ஆண்கள், 9 பெண்கள் என 26பேர்  9 அணிகளாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

சென்னையில் இருந்து கடந்த 26ம் தேதி பயணத்தைத் தொடங்கிய அவர்கள் புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, வழியாக நேற்று தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் இன்று தூத்துக்குடியில் எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் டூவிபுரத்தைச் சேர்ந்த எக்ஸ்டரீம் நைட்ஸ் அணியுடன் கிரிக்கெட் விளையாடினர். 

எக்ஸ்டரீம் நைட்ஸ் அணியில் வசந்த் தலைமையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர்களும், ரிக்ஷா சேலஞ்ச் அணியில் ரூபர்ட் தலைமையிலான வெளிநாட்டினரும் களமிறங்கி நட்புறவு கிரிக்கெட் விளையாடினர். கிரிக்கெட் விளையாடிய உள்ளூர் சிறுவர்களுடன் சேர்ந்து புகைப்பட எடுத்துக் கொண்டனர்.தமிழக சுற்றுப் பயணம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெளிநாட்டினர் தெரிவித்தனர். 

இவர்கள் நாளை குற்றாலம் செல்கின்றனர். அங்கிருந்து 5ம் தேதி குமரி செல்கின்றனர். பின்னர் 6ம் தேதி திருவணந்தபுரம் புறப்பட்டு செல்கின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை சென்னை ஈவன் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிர்வாக இயக்குநர் அரவிந்த் பிரம்மானந்தம் செய்திருந்தார். 


இனிய புத்தாண்டு நல்வாழ்த்து​க்கள்

----------
"  ்எழுத்தில்..உண்மையும்..!
     பேசுவதில் ..நேர்மையும்...
      காண்பதில்..கவனமும்..
   நம்   மனதில்... இருந்தால்...?
வெற்றியும்..துணிச்சலும்...
தானாக..வந்து சேரும்