Wednesday, October 12, 2011

                            உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்க மதுவை பெட்டி பெட்டியாக பதுக்கி வைப்பதால் டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்பட முக்கிய கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுடன் பிரசாரத்துக்கு வருவோருக்கு தினக்கூலி, 3 வேளை உணவு, மது போன்றவற்றை அளித்து குஷிப்படுத்தி வருகின்றனர். இதற்காக டாஸ்மாக் கடைகளில்  மொத்தமாக பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி அரசியல் கட்சியினர் பண்ணை வீடுகள், தோட்டங்களில் பதுக்கி வைத்து விடுகின்றனர்.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து இப்பகுதியில் உள்ள ‘ரெகுலர்‘ குடிமகன்களுக்கு விரும்பிய சரக்குகள் கடைகளில் கிடைப்பதில்லை. இதனால் குடிமகன்கள் சிலர் டாஸ்மாக் ஊழியர்களிடம் சண்டையிடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்க மதுவை பெட்டி பெட்டியாக பதுக்கி வைப்பதால் டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்பட முக்கிய கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுடன் பிரசாரத்துக்கு வருவோருக்கு தினக்கூலி, 3 வேளை உணவு, மது போன்றவற்றை அளித்து குஷிப்படுத்தி வருகின்றனர். இதற்காக டாஸ்மாக் கடைகளில்  மொத்தமாக பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி அரசியல் கட்சியினர் பண்ணை வீடுகள், தோட்டங்களில் பதுக்கி வைத்து விடுகின்றனர்.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து இப்பகுதியில் உள்ள ‘ரெகுலர்‘ குடிமகன்களுக்கு விரும்பிய சரக்குகள் கடைகளில் கிடைப்பதில்லை. இதனால் குடிமகன்கள் சிலர் டாஸ்மாக் ஊழியர்களிடம் சண்டையிடுகின்றனர்.

No comments:

Post a Comment