Monday, May 11, 2015

ஜெ. விடுதலை: தூத்துக்குடியில் அதிமுகவினர் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்

»


சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.  இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் அருகே மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் அதிமுகவினர் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், டாக் ராஜா, ஏபிஆர் கவியரசு, திருச்சிற்றம்பலம், முருகன், குருத்தாய், உதயசூரியன், ரமேஷ்கிருஷ்ணன், ரமேஷ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் அவர்கள் பூக்களை தூவியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோன்று நகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஜெ. விடுதலையை கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி ஒன்றிய விவசாயிகள் அணி செயலளார் விபிஆர் சுரேஷ் மொட்டை அடித்துக்கொண்டார். அவர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தாடி வளர்த்து வந்தாராம். ஜெயலலிதா விடுதலைக்காக அவர் விரதம் இருந்துவந்த அவர் இன்று தீர்பப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் இன்று மொட்டையடித்து தனது விரதத்தை முடித்துக்கொண்டார். 

No comments:

Post a Comment