Saturday, July 14, 2018

ஸ்டெர்லைட் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை!

ஸ்டெர்லைட் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை!ஸ்டெர்லைட் எவ்வித விதிமீ“ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வித சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறவில்லை. ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகளைச் சந்தித்து வருவதாக துத்துக்குடி வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார் அந்த ஆலையின் சி.இ.ஓ ராம்நாத்.

கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் கடந்த 1ஆம் தேதி செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆலையைச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வாய்ப்பே இல்லை எனவும், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஓ ராம்நாத், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகளைச் சந்தித்து வருவதாக தூத்துக்குடி வட்டார மக்கள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் மக்கள் 250 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு, பணிகளை எல்லாம் மீண்டும் தொடங்க வேண்டும். கிராம மக்களுடனான எங்களது உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்" என்று கூறினார்.

"எங்களது நிறுவனம் எவ்வித சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறவில்லை. எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று சி.இ.ஓ ராம்நாத் தெரிவித்தார்


THANKS;; MINABALAM

No comments:

Post a Comment