Wednesday, December 12, 2018

தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா



தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் இல்லத்திருமண விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளரும், டூட்டிஆன்லைன் செய்தியாளருமான குமாரவேல் பேத்தியும், கலைஞானபுரம் முருகன் லதா தம்பதியின் மகளுமான கார்த்திகாவிற்கும் கீழக்கரை சந்திரபோஸ் பாண்டியம்மாள் தம்பதியின் மகன் முத்துக்குமாருக்கும் இன்று காலை 6 மணியளவில் தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்தை சண்முகம் பட்டர் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களுக்கு தூத்துக்குடி பங்களா தெருவிலுள்ள விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்றார் உறவினர்கள் தொழிலதிபர்கள், அரசியல்கட்சியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு வந்த அனைவரையும் மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் வரவேற்று உபசரித்தார்.. 

No comments:

Post a Comment