Monday, March 18, 2013


நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ....

ஈழத்தமிழர்களை பாதுகாப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று முள்ளிவாய்க்கலில் படுகொலை நாடகத்தை, பாரத பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு கட்சித்தலைவர் அன்னை சோனியா காந்தி துணையுடன் அரங்கேற்றினார்.
 முள்ளிவாய்க்கால் நாடகத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி, சுப.வீரப்பாண்டியன் உள்ளிட்ட நடித்த காட்சிகளை பார்க்கும் போது... நெஞ்சு பொறுக்குதில்லையே...
 முள்ளிவாய்க்கால் படுகொலையை தொடர்ந்து, 2010ம் ஆண்டு ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா வந்தார். இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 சிவப்பு கம்பள வரவேற்புக்கு, பிறகு நடந்த இரவு நேர விருந்தின் மது அருந்தும் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளோம்.
 அதே போல், ராஜபக்சே மகன்கள் நாமல், யசந்தா..பெண்களுடன் அடிக்கும் கூத்த்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளோம்..
 இந்த புகைப்படம் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் பார்த்து ரசித்த படமாகதான் இருக்கும்...
 இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்... என்று பார்ப்போம்...
 தமிழக மக்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா?

No comments:

Post a Comment