Sunday, December 7, 2014

ஸ்டெர்லைட் மகளிர் மேம்பாட்டு புதிய‌ திட்டம் சகி துவக்கம்




தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சகி துவக்க விழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 1400 குழுக்களை சேர்ந்த 19ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

தற்போது இந்த திட்டம்  "சகி" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி என்றால் தமிழில் தோழி என்று அர்த்தம். இந்த திட்டம் பெண்களுக்கு தோழியாக திகழுகிறது. தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் இன்று காலை இதன் தொடக்க விழா நடைபெற்றது. தூர்தர்ஷன் கோவை, இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி இத்திட்டத்தை தொடங்கி வைத்து சிறந்த தொழில் முனைவோருக்கான பரிசுகளை வழங்கினார்.

வேதாந்தா குழும தகவல் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சித் துறை தலைவர் ரோமா பல்வானி இத்திட்டத்தில் உள்ள பங்காளர்களை கௌரவித்து பரிசுகளை வழங்கினார். மனித வளத்துறை தலைவர் ராஜேஷ் பத்மநாபன், மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற்ற சிறந்த தொழில் முனைவோருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். வழக்கறிஞர் சொர்ணலதா வாழ்த்துரை வழங்கினார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுய உதவிக்குழுவின‌ர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் முதனமை செயல் அலுவலர் ராம்நாத், பொதுமேலாளர் சுமதி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இயக்குநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.





 







No comments:

Post a Comment