Tuesday, March 10, 2015

தூத்துகுடியில் காமராஜ் அகாடமி துவக்கவிழா

 


 




தூத்துக்குடி பக்கிள்புரம் ஜனதா பள்ளியில் காமராஜ் அகாடமியை தமிழக மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் வக்கீல்.சொக்கலிங்கம் தொடங்கிவைத்தார்.



மதசார்பற்ற ஜனதா தள மாநகர செயலாளர் கோமதி நாயகம் வரவேற்றார். அரசு வேலைக்கான பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் எழிலன், ரகு,ராஜதுரை, சரவணன், ராமநாதன், பேராசிரியை வாசுகி ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி வகுப்ப்புகள் எடுத்தனர். இந்த அகடமியின் இயக்குநர் புவனேஸ்வரி வெங்கட் நன்றி கூறினார். 



நிகழ்ச்சியில் ஜனதா தள நிர்வாகிகள் வேல்முருகன்,சாஸ்தாவூ, ராஜேந்திரன் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment