Monday, March 9, 2015

இளம்பெண்ணை ஏமாற்றிய காவல் நிலைய எழுத்தர்.

 

தல் திருமணத்தினை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி, 2வது திருமணம் செய்த காவல் நிலைய எழுத்தர் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வள்ளிவிளை கிராமம், வாரியார் தெருவைச் சேர்ந்தர் பமீலா. இவர் தனது கைக்குழந்தையுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது கனவர் இன்பராஜ், சூரங்குடி காவல் நிலையத்தில் நிலைய எழுத்தராக உள்ளார். அவர் முதல் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி என்னை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 



கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.  தனக்கு நெல்லைக்கு இடமாற்றம் கிடைத்துவிடும், அங்கு புதுவீடு பார்த்து குடித்தனம் நடத்தலாம் என்று கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் என்னை ஏமாற்றி வந்தார். இந்நிலையில், அவர் ஏற்கனவே திருமணம் செய்த பொன் சரண்யாவுடன் ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, அவர் என்னை ஏமாற்றி, எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியி்டம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிததுள்ளார். 

No comments:

Post a Comment