தூத்துக்குடி ஆட்சியர் மாற்றத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், இடம் மாற்றப்பட்டதற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, வி.வி. மினரல்ஸ் மற்றும் பீச் மினரல்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனை முடிந்த அதே நேரத்தில், சோதனையை நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத கும்பல் மீது எந்த அதிகாரிகளும் துணிந்து நடவடிக்கை எடுக்க இயலாத நிர்வாக ரீதியான நெருக்கடியை இதுபோன்ற நடவடிக்கை எற்படுத்தி விடும் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றல் உத்தரவு வந்த நேரமும், சூழ்நிலையும் கண்டிக்கத்தக்கது என்றும் விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி:தூத்துக்குடி ஆட்சியர் மாற்றத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, வி.வி. மினரல்ஸ் மற்றும் பீச் மினரல்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனை முடிந்த அதே நேரத்தில், சோதனையை நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத கும்பல் மீது எந்த அதிகாரிகளும் துணிந்து நடவடிக்கை எடுக்க இயலாத நிர்வாக ரீதியான நெருக்கடியை இதுபோன்ற நடவடிக்கை எற்படுத்தி விடும் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றல் உத்தரவு வந்த நேரமும், சூழ்நிலையும் கண்டிக்கத்தக்கது என்றும் விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி:தூத்துக்குடி ஆட்சியர் மாற்றத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
No comments:
Post a Comment