Thursday, August 22, 2013

மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக சிஐஎஸ்ஐ பிஷப்? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!



மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக சிஐஎஸ்ஐ பேராயர் செயல்படுவதாக தூத்துக்குடியில் மீனவர்கள் சார்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நெல்லை - தூத்துக்குடி திருமண்ட சிஐஎஸ்ஐ பேராயராக இருந்தவர் ஜெயபால் டேவிட். இவர் சில சேகர குருக்களுடன் சேர்ந்து தாது மணல் நிறுவனங்களுக்கு ஆதரவாக, வருவாய் செயலாளர் சஜ்ஜன்சிங் பேடியிடம் மனு கொடுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

அதில், மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த தூத்துக்குடி சிஐஎஸ்ஐ பேராயர் ஜெயபால் டேவிட் மற்றும் சேகர குருக்கள், மனசாட்சியுள்ள கிறிஸ்தவர்களே இது நியாயம்தானா? பிதாவே இவர்கள் அறிந்தே பண்ணுகிறார்கள் இவர்களை மன்னியும்! என போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில் கிறிஸ்தவ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment